Nagore Puranam
எழுத மொழிகள் | அன்பில் கண்ணன் | April 2025

எழுத மொழிகள் | அன்பில் கண்ணன் | April 2025

 


1. கோபத்தில் எந்த முடிவும் எடுக்க கூடாது.

2. சந்தோஷத்தில் யாருக்கும் எந்த உறுதி மொழியையும் கொடுக்க கூடாது. குறிப்பாக பெண்களுக்கு.

3. உண்மையான காதலில் சந்தேகம் இருக்காது. அப்படி இருந்தால் அது உண்மையான காதலாக இருக்காது.

4. நமது பிள்ளைகளை வறுமை தெரியாமல் வளர்ப்பதில் தவறில்லை ஆனால் நம் உழைப்பு தெரியாமல் வளர்ப்பது தான் தவறு.

5. மனிதன் கடன் வாங்கும் போதே கவலையையும் சேர்த்து வாங்கி கொள்கிறான்.

6. மனிதன் வாழ்வில் சம்பாதிக்க வேண்டிய மிகப்பெரிய விசயம் தன்னம்பிக்கை தான்.

7. வெற்றி பெற நினைப்பவனுக்கு வானம் கூட வாசற்பாடிதான்‌.

- அன்பில் கண்ணன். 

Published in Nagore Puranam April month magazine 2025


Post a Comment

0 Comments