ஜீவகாருண்யம் | October 2025 | கவிஞர் மீரான் தாசன்


மாமிசம் உண்ணாத கருணையாளரே!

ஒரு செடியைக் கூட பிடுங்கிடாத பசுமையாளரே!

வாயில்லா உயிர்களுக்கும் வாதாடும் வாய்மையாளரே!

நம் நாட்டில் பச்சிளம் குழந்தைகள் வெறி நாய்களுக்கு இரையாகுதே.. 

மற்றொரு நாட்டில் மதவாத நாய்களால் பச்சிளம் குழந்தைகள் உயிர்ப்போகுதே.

 பல்லாயிரக் குழந்தைகளை கொன்றவனுக்குக் கருணையாளர் என்ற பட்டம். 

பிணம் திண்ணி மிருகங்களைத் தடுக்க ஏது இங்கு சட்டம்.

கவிஞர் மீரான் தாசன் 

Published in Nagore Puranam October month magazine 2025

Post a Comment

0 Comments