துவங்கிய இக்கவியின் துவக்கம் நீ
தூதுவர் மூலம் தூது தந்தாய் நீ
தூய்து உள்ளம் கொண்ட மெய்குரு நீ
தூணின்றி நிற்கும் வானும் நீ
துயில் கொள்ளும் இரவும் நீ
துலங்கும் இலங்கும் சூரியன் நீ
துளியும் சிந்து காற்றும் நீ
துவிரம் தேடும் மலரும் நீ
துன்பம் இன்பம் பண்பும் நீ
துணை இணையில்லா தூயவன் நீ
துவிதம் இல்லா ஒருவன் நீ
துணைசெய் அருள்செய் இறைவா நீ
- கவிஞர் மீரான் தாசன்
Published in Nagore Puranam October month magazine 2023

0 Comments