என் அரபி ஆசான் ஈன்ற தமிழே!
புதுக் கல்லூரியில் துவங்கிய முகிழே!
நாகூர்ப் புராணத்தின் புதுமைப்பித்தன்!
நாகூரில் பிறந்த புலமை பித்தன்!
நீ அரூபன் வரைந்து சொரூபம்!
அவர் தொட்டது எல்லாம் தத்ரூபம்.!
ஆளுநர் கையால் பெற்றது பெருமையில்லை!
தமிழ் ஆளுமையைப் பெற்றது தான் பெருமை!
நாகூரின் தமிழ்த் தொண்டு உலகெங்கும் பரவட்டும்!
நாகூராரின் மனம் அதைக் கண்டு குளிரட்டும்!
மீ. .செய்கு அப்துல் காதிர் முனைவரை வாழ்த்துகிறேன்!
மீரான் தாசன் கவி கொண்டு இறையைத் துதித்துப் போற்றுகிறேன்!
- கவிஞர் மீரான் தாசன்
Published in Nagore Puranam March month magazine 2026

0 Comments