🔴 ATTENTION READERS Nagore Puranam – International Journal of Tamil Studies invites original research articles for its August 2026 Issue. Scholars, professors, researchers, research scholars, history enthusiasts, and academicians from all disciplines are cordially invited to submit their research papers and contribute to the advancement of Tamil studies and interdisciplinary research. 📞 +91 80124 91450 | +91 70923 50209
ஆய்வுக் கட்டுரைகள் பிரசுர நெறிமுறைகள்

ஆய்வுக் கட்டுரைகள் பிரசுர நெறிமுறைகள்

1. பொதுத் தகவல்கள்

* நாகூர்ப் புராணம் (ISSN: 3139-4965) என்பது மதிப்பாய்வு செய்யப்பட்ட (Peer Reviewed) பன்னாட்டுத் தமிழ் ஆய்விதழ் ஆகும்.

* தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், வரலாறு, பண்பாடு, சமயம், கல்வி, மொழியியல், நாட்டுப்புறவியல் மற்றும் தமிழுடன் தொடர்புடைய பிற துறைகளின் அசல் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே வெளியீட்டிற்காக ஏற்கப்படும்.

* சமர்ப்பிக்கப்படும் கட்டுரை வேறு எந்த ஆய்விதழிலும், மாநாட்டு மலரிலும் அல்லது இணைய இதழிலும் முன்பே வெளியிடப்பட்டிருக்கக் கூடாது.

* கட்டுரைகள் அனைத்தும் கட்டுரையாசிரியரின் சொந்த ஆய்வுப் படைப்பாக இருக்க வேண்டும். கருத்து ஒற்றுமை (Plagiarism) கொண்ட கட்டுரைகள் ஏற்கப்படமாட்டாது.


2. கட்டுரை தயாரிக்கும் முறை

* கட்டுரை யூனிக்கோடு (Unicode) எழுத்துருவில் MS Word வடிவில் தயாரிக்கப்பட வேண்டும்.

* கட்டுரை A4 அளவில், Font Size 12, Line Spacing 1.15 என்ற அமைப்பில், அதிகபட்சம் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* கட்டுரையில் தட்டச்சுப் பிழை, இலக்கணப் பிழை மற்றும் மொழிநடைப் பிழைகள் இருக்கக் கூடாது.

* கட்டுரையில் தலைப்பு, ஆய்வுச் சுருக்கம், குறிச்சொற்கள், முன்னுரை, ஆய்வுப் பகுதி, முடிவுரை மற்றும் மேற்கோள் நூற்பட்டியல் ஆகியவை இடம்பெற வேண்டும்.

* ஆய்வுச் சுருக்கம் (Abstract), குறிச்சொற்கள் (Keywords) மற்றும் கட்டுரையாளரின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும்.


3. கட்டுரையாளர் விவரங்கள் 

* கட்டுரையாளரின் முழு பெயர், பணிநிலை, நிறுவனம், முழுமுகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டுரையின் முதல் பக்கத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.


4. மேற்கோள்கள் மற்றும் ஆதாரங்கள்

* அனைத்து மேற்கோள்களுக்கும் பொருத்தமான மேற்கோள் நூற்பட்டியல் (References) இணைக்கப்பட வேண்டும்.

* படங்கள், அட்டவணைகள் மற்றும் வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டால் அவற்றிற்கு பொருத்தமான தலைப்பு மற்றும் வரிசை எண் வழங்கப்பட வேண்டும்.


5. மதிப்பாய்வு மற்றும் வெளியீடு

* அனைத்து கட்டுரைகளும் முதன்மை ஆசிரியர் மற்றும் மதிப்பாய்வாளர்களின் (Peer Review) பரிசீலனைக்குப் பின்னரே வெளியீட்டிற்குத் தேர்வு செய்யப்படும்.

* முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.

* வெளியீட்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளுக்கான ஒப்புதல் தகவல் கட்டுரையாளரின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.


6. கட்டுரை சமர்ப்பித்தல்

* கட்டுரைகளை nagorepuranam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

* ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி வரை பெறப்படும் கட்டுரைகள் பரிசீலனை செய்யப்படும்.

* ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி ஆய்விதழ் வெளியிடப்படும்.

* ஒவ்வொரு ஆய்விதழ் அதிகபட்சம் 10 ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே வெளியிடப்படும்.

* கட்டுரைகள் First In – First Out (FIFO) முறையில் பரிசீலிக்கப்படும்.


7. வெளியீட்டுக் கட்டணம்

* பேராசிரியர்கள் – ₹400/-

* முனைவர் பட்ட ஆய்வாளர்கள் – ₹350/-

* தமிழ் ஆர்வலர்கள் – ₹300/-

* கட்டுரை வெளியீட்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட பின்னரே கட்டணம் செலுத்த வேண்டும்.


8. பொறுப்புத் துறப்பு

* வெளியிடப்படும் கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துகளுக்கு கட்டுரையாளர்களே முழுப் பொறுப்பாளர்கள்.

* தேவையெனில் மொழிநடை, எழுத்துப்பிழை மற்றும் வடிவமைப்பில் சிறிய திருத்தங்களைச் செய்ய ஆசிரியர் குழுவிற்கு உரிமை உண்டு.

Post a Comment

0 Comments