வானம்
வாசிக்கும்
வரிகள்...
பூக்கள்
நேசிக்கும்
புன்னகை...
விளைநிலம்
பெறும்
விருதுகள்...
விவசாயி
எதிர்பார்க்கும்
விருந்தாளி...
வனங்கள்
செழிக்க
வான்மடல்...
ஓடைகள்
இசைக்கும்
புல்லாங்குழல்...
பயிர்கள்
சுவாசிக்கும்
மூச்சு காற்று...
பூமியின்
உயிர்களுக்கு
புத்துணர்ச்சி...
மழைத்துளி
நிலம் சேமிக்கும்
உயிர்த்துளி!!!
- வடகரை கவிஞர் வாஹிதி ஃபரீது முஹம்மது ஒலி
Published in Nagore Puranam September month magazine 2025

0 Comments