மழை | September 2025 | வடகரை கவிஞர் வாஹிதி ஃபரீது முஹம்மது ஒலி

வானம்

வாசிக்கும்

வரிகள்...

பூக்கள்

நேசிக்கும்

புன்னகை...

விளைநிலம்

பெறும்

விருதுகள்...

விவசாயி

எதிர்பார்க்கும்

விருந்தாளி...

வனங்கள்

செழிக்க

வான்மடல்...

ஓடைகள்

இசைக்கும்

புல்லாங்குழல்...

பயிர்கள்

சுவாசிக்கும்

மூச்சு காற்று...

பூமியின்

உயிர்களுக்கு

புத்துணர்ச்சி...

மழைத்துளி

நிலம் சேமிக்கும்

உயிர்த்துளி!!! 

- வடகரை கவிஞர் வாஹிதி ஃபரீது முஹம்மது ஒலி

Published in Nagore Puranam September month magazine 2025

Post a Comment

0 Comments