அர்ப்பணிப்பு | September 2025 | கவிஞர் சூ. சிவராமன்

 

வளையல் வாங்கித் தந்ததில்லை.

புடவை வாங்கித்தர வக்கில்லை.

நடவு நட்டக் காசில் 

நன்றாகப் படிக்கவுமில்லை.

அக்காள் தங்கையைக் கரையேற்றவில்லை

ஒரு வேளை சோறு போட்டதில்லை.

வெட்டி மயிராய் மழித்த கவிதைகளை

அம்மாவுக்கு அர்ப்பணிக்க மனமில்லாமல்

கிழித்தெறிந்தேன்.

- கவிஞர் சூ. சிவராமன் 

Published in Nagore Puranam September month magazine 2025


Post a Comment

0 Comments