வட்டத்தின் நடுவே ஒற்றை நாற்காலி
ஒளிவீசி அமர்ந்திருக்கிறது
கைநீட்டிக் காத்திருக்கிறது
எதிர்பார்ப்பு வெறுங்கை முழம் போடுகிறது
கூப்பிய கரங்கள்
கூழைக்கும்பிடு, வார்த்தைத் தோரணங்கள்,
கண்ணறியாப் பந்தலில்
காய்த்துத் தொங்குகிறது அறம்.
- கவிஞர் சூ. சிவராமன்
Published in Nagore Puranam February month magazine 2024

0 Comments