அதிகாரம் | February 2024 | கவிஞர் சூ. சிவராமன்

அதிகாரத்தில் ருசி கொண்ட நாக்கை

அடையாளங்காண விழைந்தேன் 

அது உண்மைகளை விழுங்கி

 ஏப்பமிட்டுக்கொண்டிருக்கிறது

 பிரம்மாண்டப் புளுகு மூட்டைகளை

 அவிழ்த்துக் கொண்டிருக்கிறது

 வெகுளிகளின் குரல்வளைக் குருதி

 அதன் ருசி மொட்டுக்களில்

- கவிஞர் சூ. சிவராமன் 

Published in Nagore Puranam February month magazine 2024

Post a Comment

0 Comments