சொல்லில் அடங்குமோ | October 2025 | கவிப்பேரொளி சே.அப்துல் லத்தீப் (நீரை. அத்திப்பூ)


இறைவன் அருளிய  

திருமறைப் புகழை  

எடுத்துச் சொன்னால் முடியுமா – அது 

எத்தனை நூல்கள்  

எழுதிய போதும்  

எல்லா விளக்கமும் அடங்குமா?  


இரசூல் நபிகளின்  

நாற்பது வயதில்  

இறங்கிடத் தொடங்கிய வசனங்கள் 

தொடர் இருபத்து மூன்று  

ஆண்டுகள் வரையிலும்  

இறங்கிய நல்ல தருணங்கள்.  


வேதநூல் தெளிவுரை  

வேண்டிய நன்மைகள் 

வேண்டா தீமைகள் பிரித்திடும் – இது 

தெளிவாம் அத்தாட்சி 

ஒளி சத்தியத்தை  

தெளிவாய் நினைவில் இறுத்திடும்.  


ஞானம் நிறைந்தது  

கண்ணியம் மிக்கது  

நேர்வழி காட்டிடும் மதிப்புடன் – இது

அருள் நிவாரணம்  

நல்லுப தேசம் 

அனைத்தும் வழங்கும் உவப்புடன். 


உறுதியானது பாதுகாப்பிலே 

உலகோர் பெற்ற அருட்கொடை – இது 

உயிருள்ளது 

இறக்கி வைத்தது 

புனிதம் தாங்கிய உயிர்விடை. 


சட்டம் உண்மை 

ஆக்கி வைத்தது 

சகருக்கும் நற்செய்தி – இது

அச்சம் ஊட்டி  

எச்சரிப்பது  

பரிசுத்தம் போற்றும் உயர் விதி.

  

சங்கைக் குரியது 

மேன்மைக் குரியது  

அரபி மொழியை உடையது – இது 

உயர்வேயானது  

வியப்பு மிக்கது  

உயர் ஆதாரங்கள் நிறைந்தது.

  

அல்லாஹ்வின் கயிறு 

ஆதாரமுள்ளது  

அனைத்தும் நினைவில் ஊட்டி விடும் – நம்

அத்தனை பேர்க்கும் .

- கவிப்பேரொளி சே.அப்துல் லத்தீப் (நீரை. அத்திப்பூ)

Published in Nagore Puranam October month magazine 2025


Post a Comment

0 Comments