சீர்நபி வாழ்வைச் சொல்ல ! | November 2025 | கவிப்பேரொளி சே.அப்துல் லத்தீப் (நீரை அத்திப்பூ)

 


ஏழுகடல் நீரையும் எழுதும்மையாக்கினால்

எழுதுகோல்தாங்கவேண்டும்- என் எண்ணத்தின் வலிமையை

இன்னும்மடங்காக்கியே இறையருள் காக்க வேண்டும்.


வாழுமுயிர் எல்லாமும் வணங்கிடும் தூயவன்

வாழ்த்துவான்எழுத்தில்நிற்பான்- எம்

வள்ளல் இர சூல்நபி வாழ்க்கையை எழுதஎன் வரிகளில் துணையிருப்பான்,

ஏழைபோல் வறுமையில் எப்போதும் வாழ்ந்தவர் இதயத்தால் உயர்ந்த செல்வர் 

அவர் எளிமைநிறை வாழ்க்கையை ஏற்றுமே நடப்பவர்


எதனையும் எளிதில் வெல்வர்.

பாழ்பட்டு நின்றதாய் பண்புகள் அற்றதாய் 

பாலைவன மக்கள் உள்ளம்- தம் 

பாதையில்தீமைகள் பரவிட வாழ்ந்தார்கள் 

பாவத்தில் அனைத்து இல்லம்.


அம்மண்ணில் தீன்பயிர் அழகுற செழித்திட 

ஆண்டவன் அருளைப் பற்றி இவர்

ஆற்றிய சேவைகள் ஏற்றுபின்மக்களும் 

எழுந்தார்கள் தீனைச் சுற்றி எம்முறை

எடுத்தோதி இயம்பியே எழுதினும்

 எத்தனை நூல் அடங்கும்- என்

 எழுதுகோல் வலிமைபெற இறைவனே அருளுவான் எல்லையில் பலமடங்கும்.


ஈருலகத் தலைவராய்

எல்லையிலாப்புகழுடன் இருக்கும்

நபிவாழ்க்கைசொல்ல- என் இதயத்தில் குர்ஆனின்

உண்மை ஒளிகாட்டிட ஏந்துகிறேன் இருகை மெல்ல,

சேருகிறஎழுதுகோல் சிந்தைநிறை புகழ்சொல்ல

செயல்பாட்டை உயர்த்து

அல்லாஹ் உன் சிந்தனையைமட்டுமே

சிரம்பணிந்து ஏற்கிறேன் சீர்நபிவாழ்வைச்சொல்ல!.

- கவிப்பேரொளி சே.அப்துல் லத்தீப் (நீரை அத்திப்பூ) 

Published in Nagore Puranam November month magazine 2025


Post a Comment

0 Comments