அத்தனை உறவுமுன் சொத்தினை நோக்கியே
ஆண்டவன் கருணைதான் உண்மை- உளம்
வித்தினைத் தர்மமாம் நிலத்தினில்போட்டால்
உனக்குள் இமயமாம் நன்மை.
சித்தனைப்போல்மனம்
சிந்தையில் இருந்தால்
சிறுசிறு துன்பமும் தூள்தான்- பெரும்
சீர்மிகுவாழ்க்கை நேர்வந்து நிற்கும்
செகத்திலும் நற்பெயர் தேன்தான்.
எந்த நேரமும்சொர்க்கமே நோக்கம்
இதற்கென உன்செயல் அமைக- இதன்
ஏற்றமாம் ஒழுக்கம் போற்றிட வேண்டும்
இம்மியும் விலகிடாதிருக்க.
*****************************************
விருப்பமும் வேலையும்
ஒன்றாய் இணைந்தால்
வெற்றி விளைவுகள் உன்னதமே
அதன் நிறைந்த பயனும்
விரைந்தே வந்திடும் கண்ணெதிரே.
விரிந்த புகழும்
வருத்தமும் அசதியும் வரவிட்டாலே
வாழ்நாள் அமையுமபெருஞ்சுமையே- இது
வந்த பின்னலே விரட்டியடிப்பது
வலைப்பது நாய்வால் எனும் கதையே.
தரித்திரம் வறுமை , தளராநோய்ச்சுமை
தன்னால் வந்திடும் சோம்பலினால்- இது
தன்னையும்வாட்டி குடும்பத்தும் நீட்டி
தானே பிடித்திடும் உறுதியினால்,
சரித்திரம்படைக்க நினைத்திடும்
உளந்தான் மகிழ்ச்சி ஆர்வம் பெற்றோங்கும்
இதைத் தனித்த பற்றுடன்
ஏற்றிடும்வாழ்வில் தனிப்புகழ்
இமயம் பற்றாகும்.
- கவிப்பேரொளி சே.அப்துல் லத்தீப் (நீரை அத்திப்பூ)

0 Comments