உயிரினைய உங்களை
உள்ளத்தில் தாங்கினேன்
உணர்ச்சியில் மெய்சிலிர்த்தேன் - இனி
ஒவ்வொரு எழுத்திலும் என்னுயிர்
அணுக்களை உரமாக்கி
கருத்தில் வைப்பேன்.
பயிரனைய தீனுக்குப்
பாதையாய் உங்கள் உள்ளம்
பாரெல்லாம் வியந்து போற்றும் - இது
பட்டியல் இட்டுவிட எட்டாத முயற்சிதான் பயகம்பர் வாழ்வின் ஏற்றம்.
தயிருக்குள் வெண்ணையாய்த்
தமிழுக்குள் இனிமைசுகம் தன்னாலே
உயிர்சிறப்பை- நான் தக்கபடி
உரைத்திட தழும்பியேவந்திடும்
தமிழே இது உன்பொறுப்பே!
வயிறுக்குள் சேர்கின்
வளசக்தி உணவுதான்
வாழ்வுயிர்சிறக்கவைக்கும்- நபிகள்
வாழ்க்கையைஎழுதிடும் வரலாறு
நூலுக்கு வற்றாததமிழ்நிறைக்கும்.
- கவிப்பேரொளி சே அப்துல் லத்தீப் நீரை அத்திப்பூ

0 Comments