பழக்கம் திறந்திட!
மக்களிடத்தில்
வேற்றுமை சிறிது
மனத்துள் நிறைந்து வெளிப்படும் - அது
அவர்களிடத்தினில் இருக்கும் பழக்கம்
என்பது வந்தே புலப்படும்.
சிறிய வேற்றுமை
பெரிதாய் மாறிடும்
எடுக்கிற எண்ண முடிவுகளால் அது
இருக்கும் நேர்மறை
உணர்வைப் பொருத்தே
என்றும் வெற்றிமுடிவுகளாய்.
நேர்மறை எதிர்மறை
என்பதைப் பொருத்தே நிகழ்த்தும்
செயல்களில் பழக்கம்வரும்- உன்
கூடி இருந்தால் நிச்சயம் தோல்வி கூடவரும்.
நெஞ்சில் வஞ்சம்
ஊர்தரும் புகழும்
உன்னைச் சேர்வது உளத்து
எண்ண ஏற்றம்தான்- அது உன்னை
உயர்த்தும் மண்ணைவளர்க்கும்
உடனே காண்பாய் மாற்றம்தான்.
*****
ஏற்று முன்னேறு !
வாய்ப்பு வந்துக்
வழிநிலை இலையேல் தளராதே - நீ
கதவைத்தட்டும் வீட்டைக் கட்டிடு
கதவைப் பொறுத்திடு
வந்திடும்வாய்ப்பு தன்னாலே.
மேய்ப்புல் இல்லாத
கட்டாந்தரையினில்
மேய நினைக்குமா வெள்ளாடு- அது
புல்தரை தேடியே
செல்லும்என்பதே
புரிந்த உண்மைச் சொல்லேடு.
எட்டாக்கனிக்கு
எடுக்கும் முயற்சியை
இதயம் ஏற்றுக் கொள்ளாதே- உன்
எண்ணம் சீச்சி
இந்தப் பழத்தில் புளிப்பு என்பதை மறுக்காதே.
முட்டாள் என்றே
எவும் கூறினால்
முழுமதி நாய்குரை எனக்கூறு- நீ
முயற்சி ஒன்றையே தளர்ச்சி இன்றியே
முழுவதும் ஏற்று முன்னேறு.
- கவிப்பேரொளி சே.அப்துல் லத்தீப் (நீரை அத்திப்பூ)
Published in Nagore Puranam February month magazine 2026

0 Comments