பேனாவில் மையும், வெள்ளை காகிதமும் இருந்தால் போதும்... நம் உணர்வுகளை கொட்டி தீர்த்துவிடலாம்...
தீயில் வதைந்து உருகும் தங்கம் பொன்நகையாவது போல்... சோதனையில் வதையும் உன் வாழ்வு புன்னகையாகும்.....
உன்னை நோக்கி வரும் சொற்களை சேகரித்து வைத்து... உன் சுயசரிதையை உருவாக்கிகொள் சொன்ன இதழ்கள் உனக்கு சோபனம் கூறுமளவிற்கு...
உனக்கு பின்னால் கைத்தட்டி ஏளனமாக சிரித்தவர்களை... உனக்கு முன்னால் நின்று புன்னகைத்து கைத்தட்ட வைப்பதே உனது வெற்றி...
இல்லாததை நினைத்து துன்பம் கொள்ளாதே...
இருப்பதை நினைத்து இன்பம் கொள் வாழ்க்கை மேன்மைப் பெரும்...
- கவிஞர் தமிழ் காதலன்

0 Comments