சுமப்பதை சுகமாய் ஏற்று
வலிகளை வரமாக உணர்ந்து
அசைவுகள் ஆனந்தம் அளித்து
உதைத்தலை உயர்வாக கருதி
உணவை உனக்காக தவிர்த்து
கசப்பானதை கருவுக்காக உண்டு
வேகமாய் நடப்பதை குறைத்து
தூக்கத்தில் துரிதமாகத் திரும்புவது
பெற்றெடுக்க பெரும் துயர் கண்டு
தன் நிலையை தானமாகத் தந்தவளே!
தாய் தாயின் அன்பு மட்டும் இல்லையானால்? மண்ணில் மனித இனம் ஏது...
- கவிஞர் வடகரை ஃபரீது வாஹிதி

0 Comments