வெற்றிகள் தொடரட்டும்...
நாகூர் புராணம்
நல்லதமிழ்த் தோரணம்
நலம் கூட்டி வளர்க செழித்து - அதன்
நற்பணி சிறக்க அற்புதம் விளைக்க
நாம் வேண்டி வாழ்த்துவோம் மகிழ்ந்து.
பாகூறும் தேன்சுவை படைப்புகள்
கருத்தமை பதிவுகள்
ஒவ்வொன்றும் சிறப்பு - அந்தப்
பணியினைச் செய்பவர் நலம் பல பெற்றிட
பாராட்டி ஏத்துவோம் பொறுப்பு.
சான்றோர்தம் சிறப்புகள்
சக்திகவி விரிப்புகள்
சரியான முறையிலே உணர்வு - அதன்
சத்தியம் வெளிப்பட உத்தம வடிவிலே
சகலரின் உழைப்பதே கொணர்வு.
- கவிப்பேரொளி. நீரை. அத்திப்பூ @ சே.அப்துல் லத்தீப்
(அஞ்சல் பயிற்சி மைய மேனாள் உதவி இயக்குநர்)

0 Comments