Nagore Puranam
பாக்கியம் பாக்கியம் ! | கவிப்பேரொளி நீரை அத்திப்பூ (சே.அப்துல் லத்தீப்) | May 2026

பாக்கியம் பாக்கியம் ! | கவிப்பேரொளி நீரை அத்திப்பூ (சே.அப்துல் லத்தீப்) | May 2026



மனைவி அமைவது

பாக்கியம் பாக்கியம்

மனத்துள் மகிழ்ச்சி

நிறைந்து விடும்- உன்

மக்கட்செல்வம் தக்க

முறையினில் வளர்ந்து

புகழினை எட்டிவிடும்.

உனைவீண்பழிக்கு

ஆளாக்காதே

ஒருகுற்றமும் நீ

சொல்லாதே - அவள்

ஒரு சில குற்றம்

செய்து விட்டாலும்

உண்மை உயர்குணம்

மறவாதே.


கணவன் மனைவி

உறவில் பகையைக்

கூட்டிவைப்பது

சந்தேகம் - அதைக்

கனவிலும் எண்ணிப்

பார்த்துவிடாதே

கண்டிப்பாய் சிதையும்

உன்தேகம்,

மனைவியைக்

குறையாய் சொல்லாதவனே 

மக்கள் மத்தியில் 

தலைநிமிர்வான்- அவன்

மாறா ஏறு 

என்பதைப்போல 

மகிழ்ந்து வெற்றி நடையிடுவான்,

- கவிப்பேரொளி நீரை அத்திப்பூ (சே.அப்துல் லத்தீப்)

Post a Comment

0 Comments